Wednesday, January 18, 2012

பாம்புக் கோயில்கள்

1. திருவாரூரில் மூலவராக இருக்கும் வன்மீகநாதருக்கு புற்றிடம் கொண்ட நாதர் என்ற பெயரும் இருக்கிறது. இது சுயம்புலிங்கம். ஒரு பாம்புப்புற்றிலிருந்து எடுக்கப்பட்டது.

2. திருப்பதி மலையின் தோற்றம் பாம்பைப் போலவே இருக்கிறது. தன் படத்தை திருமலையில் வைத்திருக்கும் வாலை கிருஷ்ணா நதி வரை நீட்டியிருப்பதாக சொல்வார்கள்.

3. சென்னை திருவொற்றியூரில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோயிலில் உள்ள லிங்கம் புற்று வடிவமாக காட்சியளிக்கிறது. இங்குள்ள வடிவுடை நாயகியை தரிசனம் செய்தால் நாகதோஷம் விலகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வூரின் புராணப்பெயர் வானொளிப்புற்றூர் என்பதாகும்.

4. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாம்பை மூலவராகக் கொண்ட கோயில் இருக்கிறது. இவரை நாகராஜர் என்கிறார்கள்.

5. நாகர்கோவில் அருகிலுள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலின் புற்று 56 அடி உயரம் உடையது. ஐந்து முகங்களைக் கொண்ட இந்த புற்று வளர்ந்துகொண்டே இருப்பதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது.

6. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், கும்பகோணம் நாகநாதர் கோயில் ஆகியவற்றில் புற்று மண்ணை பிரசாதமாக தருகிறார்கள். இந்த மண் பல வியாதிகளை குணப்படுத்தும் சக்தி உள்ளது என்ற நம்பிக்கை உள்ளது.

No comments:

Post a Comment