Wednesday, January 18, 2012

கோமடிசங்கின் சிறப்பு தெரியுமா?

ஒரு வலம்புரி சங்கு, கோடி இடம்புரி சங்குகளுக்கு சமம். எனவே, சுவாமிக்கு வலம்புரி சங்கினால் அபிஷேகம் செய்தால், விசேஷமானது. அதிலும் கோடி வலம்புரி சங்குகளுக்கு சமமானதாக கருதப்படும். கோமடி சங்கு அபிஷேகம் செய்வது மிகவும் விஷேசம். இதனை, அம்பிகையின் வடிவமான பசுவின் மடியில் இருந்து நேரடியாக சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது என்பர். (கோ - பசு, மடி - பால் சுரக்குமிடம்). இந்த சங்கை பார்க்க வேண்டுமா? மேல்மருவத்தூர் அருகிலுள்ள பெரும்பேர்கண்டிகை தான் தோன்றீஸ்வரர் கோயிலுக்குச் செல்லுங்கள். இங்குள்ள சிவலிங்கத்திற்கு கோமடி சங்கினால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இந்த அபிஷேகம் நடக்கும்போது, அமிர்தவர்ஷினி ராகத்தில் பாட்டு பாடுகின்றனர். அம்பாளே இந்த அபிஷேகத்தை, சிவனுக்கு செய்வதாக ஐதீகம். தெட்சிணாமூர்த்தியின் சீடர்களான சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமார் ஆகிய நால்வரும் நந்தி வடிவில் சிவனின் திருமணக்காட்சியை இங்கிருந்து கண்டனர்.

No comments:

Post a Comment