Tuesday, January 17, 2012

பிளாஸ்டிக் பூவால் சாமியை அலங்கரிக்கலாமா?

பூக்களைக் கடவுளுக்கு நாம் அர்ப்பணிப்பது நமது பலவிதமான கர்மாக்களை அவரிடம் சமர்ப்பிக்கவே! பலவித மணம் உடைய பூக்களை இன்ன இன்ன காரியங்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்று சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. எனினும், தற்காலத்தில் கடவுளை நினைப்பதையே பலர் பெரியதாகக் கருதுகிறார்கள். வீட்டிலிருக்கும் தெய்வப் படங்களுக்கு தினசரி பூக்களால் அலங்கரிப்பதென்பது, பொருளாதார நோக்கிலும், நேரத்தின் படியும், பொருள் கிடைப்பதைப் பொறுத்தும் பலருக்கும் சற்று கடினமாகவே உள்ளது. எனினும், ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் சிறிய பூச்செடிகளை கடவுளின் பொருட்டு வளர்ப்போமானால், மேற்கூறிய சிக்கல்களைப் போக்கிவிடலாம். இதற்கு நல்ல வைராக்கியம் தேவை. தாங்கள் கேட்டுள்ளபடி பிளாஸ்டிக் பூக்கள் வெறும் அலங்காரமாக இருக்குமே தவிர, நிறைந்த பலன்களைத் தராது. ஆகவே, அழகுக்காக பிளாஸ்டிக் பூக்களை அணிவித்திருந்தாலும், ஒரு இலையையோ பூவையோ கடவுளுக்கு உள்ளன்புடன் சமர்ப்பிக்கும் போது அவை சிறப்புப் பலன்களை நல்கும்.

No comments:

Post a Comment